கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள், தாக்கி விரட்டியடிப்பு படகு மூழ்கடிப்பு




ராமேசுவரம்,

ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 400 விசைப்படகுகளில் நேற்று மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் ஒருதரப்பினர் மீன்வளம் நிறைந்து காணப்படும் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந் தனர்.

அப்போது 6 சிறிய ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம்  மீனவர் களிடம், இங்கு மீன்பிடிக்க கூடாது. உடனே புறப்பட்டு செல்லுங்கள் என்று எச்சரித்தனர். மேலும் இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளில் ஏறி, அவர்கள் வைத்திருந்த மீன்பிடி சாதனங்கள், வலை களை நாசப்படுத்தி கடலில் வீசினர்.

தொடர்ந்து அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை துப்பாக்கி முனையில் சர மாரியாக தாக்கி விரட்டினர். இதனால் உயிருக்கு பயந்து மீனவர்கள் பாதியிலேயே அவசர அவசரமாக கரை திரும்பினர்.

அப்போது தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக் கியகுரூஸ் என்பவரின் படகு மீது ரோந்து கப்பலை, இலங்கை கடற்படையினர் மோத செய்தனர். இதில் அந்த படகு சேதமானதால் தண்ணீர் புகுந்து கடலில் மூழ்க தொடங்கியது. இதனால் அந்த படகில் இருந்த ஆண்டரூஸ், ஜெகன், நாகராஜ், உமேஸ், ரபோ ஆகிய 5 மீனவர்கள்

கூக்குரலிட்டனர்.

உடனே சக மீனவர்கள் அவர்களை காப்பாற்றி ராமேசுவரத்திற்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து பாதிக்கப் பட்ட மீனவர்கள் கூறுகை யில், நாங்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எங்களை சரமாரியாக தாக்கி விரட்டியடித்தனர். இதில் ஒரு படகு சேதமாகி மூழ்கிவிட்டது. இதற்கு  நஷ்டஈடு வழங்க வேண்டும்.

தொடர்ந்து தாக்குதல் நடந்தால் எங்கள் வாழ்க்கை கேள்விகுறியாகிவிடும் என்று சோகத்துடன் கூறினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்