நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை தனியாக பிரிக்கப்பட்டு, அதற்கான நிர்வாக பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலமாக சென்னை தலைமை செயலகத்தில் இருந்து துவங்கி வைத்துள்ளார். ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்டத்திற்கான அறிவிப்பு தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 24ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சரால் வெளியிடப்பட்டு இருந்தது. நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை தனியாக பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என தெரிவித்து, அதற்கான சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு இருந்தார். அந்த வகையில் தமிழகத்தில் மாவட்டங்களில் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. அதற்கான பணிகளை தற்போது காணொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...
SenthalaiNews WhatsApp group /
Facebook /
Instagram /
ShareChat /
Twitter /
Telegram /
YouTube /
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.