திருச்சி : துபையில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயணிகளிடம் தங்கம் பறிமுதல் செய்யவில்லை. இதற்கிடையே ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர் ஒருவர் மூலம் தங்கம் கடத்தல் கும்பலுக்கு 2.5 கிலோ தங்கம் கை மாறப் போவதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் வெளிப்புற பகுதியில் வாகனங்கள் நிறுத்த கூடிய இடத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது ஏர் இந்தியா நிறுவன ஊழியர் கோபிநாத் ( 50 ) முக்கிய பிரமுகர்கள் வரக்கூடிய கார்கோ பகுதி வழியாக வந்து தங்கம் கடத்தல் கும்பலை சந்தித்தார். அப்போது தனது கையில் வைத்திருந்த தங்க கட்டிகளை தங்க கடத்தல் கும்பலிடம் கோபிநாத் கொடுக்கும்போது சுங்கத்துறை அதிகாரிகள் சுற்றிவளைத்தனர்.
இதைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த தங்க கடத்தலில் துபை பயணி உள்பட மேலும் மூவருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஐந்து பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து திருச்சி நீதிமன்ற நடுவர் எண் 2 இல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 1.5 கோடி மதிப்புடைய தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...
SenthalaiNews WhatsApp group /
Facebook /
Instagram /
ShareChat /
Twitter /
Telegram /
YouTube /
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.