கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து உலக நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்உ வரும் சூழலில், புதிய அச்சுறுத்தலாக வந்திருக்கிறது ஓமைக்ரான். இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியது என கூறப்படும் நிலையில், டெல்டா வைரஸை விட ஆபத்தானதா என்று ஆராய்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வகை கொரோனா வைரஸ், ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் எளிதில் தாக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.
அதேபோல், பரவல் விகிதத்தில் ஓமைக்ரான் வைரஸ் உலக அளவில் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரஸின் அச்சுறுத்தலால், உலக நாடுகள் தங்களது எல்லைகளை மூடி வருகின்றன. விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது ஓமைக்ரான் வைரஸ் அறிகுறிகள் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
தென் ஆப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஏஞ்சலிக் கோட்ஸி, ஒமிக்ரான் வைரஸ் புதிய அறிகுறிகளை உருவாக்குகிறது என்று கூறியிருக்கிறார். சோர்வு, லேசான தசைவலி, தொண்டை அரிப்பு, வறட்டு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகளாக சொல்லப்படுகிறது என்றார். மேலும், ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சில நாட்களில் குணமடைந்து விடுவார்கள் என்றும், தடுப்பூசி போடாத நோயாளிகளுக்குக் கூட அறிகுறிகள் தென்படுவதாகவும் கூறினார். அதேசமயம், டெல்டா வைரஸின் போது இருந்த வாசனை, சுவை தெரியாமல் போவது, ஆக்ஸிஜன் அளவு குறைவது போன்ற எந்த அறிகுறிகளும் இந்த வைரஸில் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.