இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், எதிர்வரும் ஜனவரி 1ஆம் தேதி அன்று புத்தாண்டு பிறப்பதையொட்டி பொதுமக்கள் கடற்கரை, பூங்காக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் புத்தாண்டு கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது, பரவி வரும் கொரோனா பெருந்தொற்று, உருமாறிய கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவல் காரணமாக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளது.
இதனால், நாளை 31ஆம் தேதி பிற்பகல் முதல் ஜனவரி 2ஆம் தேதி காலை வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம், ராமேஸ்வரம், பாம்பன், குந்துகால், அரியமான், காரங்காடு, நரிப்பையூர், மூக்கையூர், சேதுக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மேற்படி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை பின்பற்றி, காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.