தன்னார்வலர்களின் வரத்துவாரி தூர்வாரும் பணிக்கு 100 நாள் பணியாளர்கள் நிதி உதவி

வரத்து வரியை புனரமைப்பு செய்ய 100 நாள் பணியாட்கள் தானாக முன்வந்து நிதியுதவி செய்துள்ளார்கள்.

ஆலங்குடி வட்டம், சேந்தன்குடி கிராமத்தில், உள்ள பெரியாத்தாள் ஊரணி, வரத்து வாரி தூர்வாரப்படாமல் பராமரிப்பின்றி இருந்த காரணத்தால், கடந்த 40 வருடங்களாக நீர் நிரம்பாமல்  இருந்து வந்தது. இதனையடுத்து, அவ்வூரில் இயங்கிவரும் 'நீரின்றி அமையாது உலகு' எனும் இளைஞர் அமைப்பு, வரத்து வரியை புனரமைப்பு செய்யும் வேலையில் இறங்கியது. இதற்கான நிதி உதவி, அந்த கிராம இளைஞர்களாலும், வெளிநாடுவாழ் நண்பர்களாலும், மாணவ மாணவியரின் உண்டியல் பங்களிப்பை கொண்டும் நடந்து வந்தது. இந்த அமைப்பின் நீர்வள ஆதார மேம்பாட்டு பணியை கேள்வியுற்று, இவர்களுக்கு உதவும் வகையில், 100 நாள் பணியாட்கள் தானாக முன்வந்து நிதியுதவி செய்துள்ளார்கள். 

இந்நிகழ்வில் நகரம் ஊராட்சி மன்றத் தலைவர் குண.வல்லரசு அவர்கள் தலைமையில் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் துரை.இளஞ்செழியன், வழக்கறிஞர் விஜயராஜகுமாரன், பணித்தாள் பொறுப்பாளர் கோபிக்கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நீரின்றி அமையாது உலகின் நிர்வாகிகளும், கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

செய்தி: முனைவர் வேத கரம்சந்த் காந்தி (செய்தியாளர்)
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات