சென்னை ஆளுநர் மசோதாவை முற்றுகையிட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக சட்டமன்றத்தில் நீட்டிற்கு விலக்கு அளிக்க வழிவகுக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பக்கோரி, ஆளுநருக்கு தொடர்ந்து தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியது. இந்நிலையில் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நீண்ட நாட்களாக கால தாமதம் செய்துவந்த ஆளுநர் இன்று நீட் மசோதாவை திருப்பி அனுப்பினார்.
நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை கண்டித்து ஆளுநர் மாளிகை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ அமைப்பை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தின்போது மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு அமைப்பினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.