வெளிநாடு செல்வோருக்கு இ பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. காலை 11 மணியளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பட்ஜெட் உரையை தொடங்கினார்.
தொடர்ந்து நிதிநிலை அறிக்கையை வாசித்து வரும் அவர் பல்வேறு முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இ பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சிப் பொருத்தப்பட்ட இ பாஸ்போர்ட் திட்டம் வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பயோ மெட்ரிக் பார்ஸ்போர்ட் என அழைக்கப்படும் இ பாஸ்போர்ட்கள், ஏடிஎம் கார்டுகள் போல சிப் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். அந்த சிப்பில் சம்மந்தப்பட்டவர்களின் முழு விவரங்கள் அடங்கி இருக்கும். மலேசியாவில்தான் முதல் முறையாக இந்த இ பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. பல நாடுகளில் இந்த பாஸ்போர்ட் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.