இந்த விதியின் கீழ் நேரடியாக சூரிய ஒளி படும்படி வேலை செய்வது மதியம் 12 : 30- முதல் 3 மணி வரை அனுமதிக்கப்படாது. இந்த முடிவானது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதற்கும் கோடை மாதங்களில் அதிக வெப்பநிலையினால் ஏற்படும் அபாயங்களிலிருந்து தொழிலாளர்களை பாதுகாப்பதற்கும் ஏற்ற அமைக்கப்பட்டதாகும்.
MOHRE இன் இன்ஸ்பெக்ஷன் அலுவல்களுக்கான துணை செயலாளரான முஹ்சின் அல் நாசி , தொடர்ந்து 18 வது ஆண்டாக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த விதியானது தொழிலாளர்கள் வெயில் சோர்வு மற்றும் வெயில் காலங்களில் பக்கவாதத்திற்கு ஆளாகும் நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க குறைவுக்கு வழிவகுத்தது என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் மதிய இடைவேளையை மீறும் நிறுவனங்களுக்கு ஒரு தொழிலாளிக்கு 5,000 திர்ஹம் என அபராதம் விதிக்கப்படும் என்றும் மதிய இடைவேளையை மீறி பல தொழிலாளர்கள் பணிபுரிந்தால் அதிகபட்சமாக 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பல ஆண்டுகளாக இந்த மதிய இடைவேளையை செயல்படுத்த உறுதிபூண்டுள்ள தனியார் துறை நிறுவனங்களின் நேர்மறையான பங்கையும் ஆதரவையும் அல் நாசி பாராட்டியுள்ளார். மேலும் இந்த விதியனை மீறும் நிறுவனங்கள் மீது திங்கள் முதல் சனி வரை , காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை , அமைச்சகத்தின் அழைப்பு மைய எண்ணான 600590000 என்ற எண்ணிற்கு அழைத்து தடை மீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் அல்லது அமைச்சகத்தின் அப்ளிகேஷனில் சென்று தங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.