பேராவூரணியில் செஸ் விழிப்புணா்வு போட்டி

தமிழகத்தில் சென்னை மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மாநிலம் முழுவதும் விழிப்புணா்வு செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்.

இதன்படி, பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் செஸ் விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போட்டியை மாவட்ட ஊராட்சி செயலா் ராதாகிருஷ்ணன்  தொடங்கிவைத்து விளையாடினாா்.

போட்டியில்,  முத்துராமன்,  சக்திநாதன்,  மதுமிதா,  கயல்விழி,  செந்தில்,  விவேக், ஹரிஹரன் மற்றும் மாணவா்கள், சுயஉதவி குழு உறுப்பினா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தவமணி (வ.ஊ), குமரவடிவேல் (கி.ஊ) மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் மூா்த்தி,  ஊராட்சித் தலைவா்கள் மல்லிகை முத்துராமலிங்கம்,  வத்சலா முத்துராமன்,  விஜயபாஸ்கா் மற்றும் அனைத்து நிலை அலுவலா்களும்  கலந்து கொண்டனா். போட்டியில் பங்கேற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீ மகேஷ்  நன்றி கூறினாா். 
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات