பேராவூரணியை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.

பேராவூரணி சுற்றியுள்ள பகுதிகளில் நாளை 12/07/2022 செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சுற்றியுள்ள பகுதிகளில் நாளை 12/07/2022 செவ்வாய்க்கிழமை
அன்று, மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக பேராவூரணி 110/ 33 கே.வி துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் பெருமகளூர் 33 கே.வி ஆவணம், திருவதேவன் 33 கே.வி ஒட்டங்காடு 33 கே.வி திருச்சிற்றம்பலம் 33 கே.வி மற்றும் வா.கொல்லைக்காடு 33 கே.வி ஆகிய மின் பாதைகளில் பேராவூரணி நகர், ஆதனூர், சித்தாத்தி காடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டையங்காடு, ஆவணம், பைங்கால், மதன்பட்டவூர், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, சித்துக்காடு, பெருமகளூர், ரெட்டவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள மின் பாதைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என உதவி செயற்பொறியாளர் எஸ்.கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات