வாட்ஸ்அப் குரூப்களில் யாருக்கும் தெரியாமல் வெளியேறும் வசதி மற்றும் இனி Screenshot - ம் எடுக்க முடியாது

வாட்ஸ்அப் செல்போன் மற்றும் கணினியிலும் இயங்கும் உலகின் அதிக மக்கள் பயன்படுத்தும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும். கடந்த 2009 - ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வாட்ஸ் அப் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கினார்கள் அதன் பின்பு பயனாளர்களை கவர வாட்ஸப் நிறுவனம் அவ்வபோது பல வித புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வாட்சப் குரூப்களில் இருந்து மற்றவர்களுக்கு தெரியாமல் வெளியேறும் வசதி, ஆன்லைன் இருப்பை சிலருக்கு மட்டும் தெரியப்படுத்தும் வசதி, ஒரு முறை மட்டும் மெஸேஜ்களை காணும் வசதியில் மெஸேஜ்களை Screenshot எடுக்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு, உள்பட பல புதிய அம்சம்கள் வாட்சப்பில் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரு முறை பார்வைக்கு அனுப்பும் திறனை வெளியிட்ட பிறகு, நிறைய பயனர்கள் புகார் அளித்தனர், ஏனெனில் ஸ்கிரீன் ஷாட்களை எடுக்கவும் வீடியோக்களை பதிவு செய்யவும் இன்னும் சாத்தியம் உள்ளது. எனவே தற்போது வாட்ஸ்அப் புதிய அப்டேட்களை கொண்டுவர உள்ளது

இந்த ஸ்கிரீன்ஷாட்டில் நீங்கள் பார்ப்பது போல், படம் அல்லது வீடியோவை ஒருமுறை பார்வைக்கு மட்டுமே ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது. மக்கள் ஸ்கிரீன் ஷாட்களை எடுப்பதிலிருந்தும் வீடியோ பிடிப்புகளைப் பதிவு செய்வதிலிருந்தும் தடுக்கும் அம்சம், படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருமுறை பார்ப்பதற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் Delete For Everyone என்ற ஆப்சனுக்கான கால அவகாசத்தை இரண்டு மணி நேரத்தில் இருந்து இரண்டு நாட்கள் மற்றும் 12 மணி நேரமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. 
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات