தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி ஆண்டு விளையாட்டு விழா தலைமையாசிரியர் முதல்வன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒலிம்பிக் வீரர் பி.சுப்பிரமணியன் விளையாட்டு ஜோதியை ஏற்றி வைத்தார்.
பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் என்.அசோக்குமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என மூன்று பிரிவுகளில் ஓட்டப்பந்தயம், தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மறைந்த பேரூராட்சி பெருந்தலைவர் சொ.சுப்பிரமணியன் நினைவாக, அவரது மகன்
சமூக ஆர்வலர் சுப.நற்கிள்ளி பரிசுபொருட்களை அன்பளிப்பாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தொழிலதிபர் லெட்சுமணன், பத்திரிக்கையாளர் கா.கான்முகமது, முன்னாள் தலைமையாசிரியர் என்.பன்னீர்செல்வம் செல்வம், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர்கள் கிட்டப்பா, அப்பாதுரை மற்றும் பல்வேறு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உடற் கல்வி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சோலை, முத்துராமலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.
முன்னதாக மாணவர்கள் ஒரே நிறத்திலான சீருடை அணிந்து கூட்டு உடற்பயிற்சி செய்து காட்டினர்.
செய்தி: முனைவர்
வேத கரம்சந்த் காந்தி (செய்தியாளர்)
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.