மரண அறிவிப்பு { K.M.S. முகைதீன் அப்துல் காதர் அவர்கள் }

செந்தலைப்பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செய்யது அஹமது அவர்களின் மகனும் ஜாஹீர் உசேன், முஜிப்ரஹ்மான், அன்வர் அலி, EX. ஊராட்சி மன்றத் தலைவர் முகமது ரபீக்,  அன்சார் மற்றும் அமீர்கான் ஆகியோரின் தகப்பனார் ஊர் ஜமாத் நிர்வாகிகளில் ஒருவருமான K.M.S. முகைதீன் அப்துல் காதர் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 4 மணிக்கு செந்தலைப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துவா செய்வோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து சொர்க்கத்திலும் உயர்ந்த சொர்க்கமாம் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக....

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு ' கீராத் ' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு ' கீராத் ' அளவு நன்மையும் கிடைக்கும் . அதற்கு இரண்டு ' கீராத் ' என்றால் என்ன என வினவப்பட்டது . அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும் ' நபிகளார் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் . ஆதாரம் : புகாரி , முஸ்லிம். 

நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும் ; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே ! அல் குர் ஆன் : 4 : 78

إرسال تعليق

0 تعليقات