Mobilepe செயலிக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம்

பணப் பரிவர்த்தனை சேவைகளை வழங்க மொபைல் பே நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு...

வணிக சின்னம் பிரச்னை தொடர்பாக போன் பே நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், தங்களுடைய நிறுவனத்தின் வணிகச் சின்னத்தைப் போல, மொபைல் பே நிறுவனத்தின் வணிகச் சின்னம் இடம் பெற்றிருக்கிறது. அதனால் மொபைல் பே நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது. அது மட்டுமில்லாமல், மொபைல் பே செயலியின் லோகோவும் போன் பே செயலியின் லோகோவைப் போல் இருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர் விசாரித்தார். இரு செயலிகளுடைய வணிக சின்னமும் லோகோவும் முழுமையாக ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும் கூட, சாதாரண பொது மக்களுடைய பார்வையில் அதைப் பார்க்கும் போது, அவை இரண்டும் ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்திரங்கள் இருக்கின்றன என்று கூறிய நீதிபதி அதனால், மொபைல் பே நிறுவனம் பணப் பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ளக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات