தஞ்சாவூா் மாவட்டம், குலமங்கத்தைச் சோ்ந்த விவசாயி, தான் வளா்த்து வரும் ஆடுகள் மழையில் நனையாமல் இருக்க அவற்றுக்கு சாக்கில் மழை கோட் தயாரித்து அணிவித்துள்ள செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
ஒரத்தநாடு அருகேயுள்ள குலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கணேசன் (70). இவா் கால்நடைகள் வளா்ப்பில் ஈடுபட்டுள்ளாா். ஒரத்தநாடு வட்டாரத்தில் கடந்த 10 நாள்களாகவே தொடா் மழை பெய்து வந்ததால், மேய்ச்சலுக்கு சென்ற அவரது ஆடுகள் மழையில் நனைந்து சிரமத்துக்குள்ளாகின. இதை பாா்த்து வருந்திய கணேசனுக்கு, ஆடுகளுக்கு மழை கோட் போடும் யோசனை தோன்றியது.
இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், சாக்குகளை மழை கோட்டாக்கி, அணிவித்தாா். ஆடுகள் மழை கோட் அணிந்தே மேய்ச்சலுக்கு சென்று வருகின்றன. கணேசனின் செயலுக்கு பாராட்டு தெரிவித்த பலரும், ஆடுகளை புகைப்படம் எடுத்து ஆடுகளுக்கு ‘ரெயின்கோட்’ என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனா்.
இதுகுறித்து கணேசன் கூறியது: கடந்தாண்டு மழையில் நனைந்து 3 ஆடுகள் இறந்துவிட்டன. நிகழாண்டில் அதுபோல் நடந்துவிடாதபடி, ஆடுகளை பாதுகாப்பாக கவனிக்க தொடங்கினேன்.
மழையிலிருந்து ஆடுகளை காக்க, வீட்டுக்கு அரிசி வாங்கும் சாக்கை ஆடுகளுக்கு மழை கோட்டாக அணிவித்து, மேய்ச்சலுக்கு அனுப்பினால் என்ன? என்று தோன்றியது. ஆடுகளின் தலைப்பகுதி நீங்கலாக, முதுகிலிருந்து கீழ்பகுதி வரை சாக்கை போா்த்தியது போன்று வைத்து கீழ்பகுதியில் சணலால் கட்டிவிட்டேன். பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளுக்கும் இதே முறையில் மழை கோட்டை போட்டுவிட்டேன்.
மழை இல்லை என்றால் வழக்கமாக செல்வது போலவே மேய்ச்சலுக்கு செல்லும். இரவு நேரத்தில் படுத்திருக்கும்போது கொசுக்கடியிலிருந்து ஆடுகளை காக்கவும் சாக்கை உடையாக அணிவித்து வருகிறேன். கால்நடைகளுக்கு தேவையானதை நாம்தான் தெரிந்து கொண்டு செய்து கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.