இந்தியாவிலுள்ள உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை உட்கொண்டதால் 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் சுகாதார அமைச்சக அறிக்கையின்படி, சிரப்களின் ஆய்வக சோதனைகளில் எத்திலீன் கிளைகோலின் எனப்படும் நச்சுப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது என கூறப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலேயே, பெற்றோர் அல்லது மருந்தாளுநர்களின் ஆலோசனையின் பேரில், குழந்தைகளுக்கு வழக்கமான அளவைத் தாண்டிய டோஸ்களில் இந்த சிரப் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 18 குழந்தைகளின் மரணத்திற்குப் பிறகு, நாட்டில் உள்ள அனைத்து மருந்தகங்களிலிருந்தும் Doc-1 Max மாத்திரைகள் மற்றும் சிரப்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
மேலும் நிலைமையை சரியான நேரத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கத் தவறியதால் ஏழு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ - வடக்கு மண்டலம்) மற்றும் உத்தரப்பிரதேச மருந்துக் கட்டுப்பாடு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் ஆகிய குழுக்களால் இது தொடர்பாக கூட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மரியன் பயோடெக் நிறுவனம் தனது நொய்டா ஆலையில் அனைத்து உற்பத்திகளை நிறுத்துமாறு சிடிஎஸ்சிஓவின் விசாரணைக்குப் பிறகு உத்தரவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நொய்டா ஆலையில் அனைத்து உற்பத்திகளையும் மரியன் பயோடெக் நிறுவனம் நிறுத்தியுள்ளது.
ஏற்கெனவே காம்பியா நாட்டில் இந்தியாவில் தயாரான இருமல் மருந்தினை அருந்திய 66 குழந்தைகள் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனம் குற்றம்சாட்டியது. இந்த நிலையில் நொய்டாவில் தயாரான இருமல் மருந்தால் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 18 குழந்தைகள் இறந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.