முத்துப்பேட்டையில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த செந்தலை இளைஞர்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில்  தமுமுக மாணவர் அமைப்பு சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) சார்பாக 17-01-2023 இன்று காலை 7.00 மணியளவில் முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் நடைபெற்றது. இதில் சுமார் கிட்டத்தட்ட 200 பேர் பங்குபெற்றனர் இதில் வெற்றிபெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ-5000/- இரண்டாம் பரிசு ரூ-3000/- மூன்றாம் பரிசு ரூ-2000/- உடன் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

செந்தலை இளைஞர் இரண்டாம் இடம்:

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் செந்தலைப்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த ஜாஹிர் உசேன் மகன் மெளலான ஆஷிக் மாரத்தான் ஓட்டத்தில் பங்கு பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ் பெற்றார். இரண்டாம் இடத்தை பிடித்த இளைஞர் மெளலான ஆஷிக் அவர்களுக்கு ஊர் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات