பட்டுக்கோட்டையில் மஞ்சள் பை வழங்கும் தானியங்கி எந்திரம் - தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

பட்டுக்கோட்டை உழவர் சந்தை வளாகத்தில் மஞ்சள் பை வழங்கும் தானியங்கி எந்திரம் தொடக்க விழா நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி உழவர் சந்தை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி பயன்பாட்டினை அகற்றி துணியாலான மஞ்ச பையினை பயன்படுத்திடும் வகையில் மீண்டும் மஞ்சப்பை என்னும் தானியங்கி இயந்திரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று துவக்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன், நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா, நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள மண்டபத்தில்  வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் ஆட்சித்தலைவர் நெகிழி இல்லா தமிழகம் குறித்து கலந்துரையாடினார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات