11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய பரிசீலிப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. முதலில் 10, 12ம் வகுப்புக்கு மட்டுமே பொதுத்தேர்வுகள் நடந்தன. அதன்பிறகு 11ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தும் முறை அமலுக்கு வந்தது. அதாவது 11ம் வகுப்பு தேர்வுக்கு ஆசிரியர்கள் யாரும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. குறிப்பாக தனியார் பள்ளிகள் 11ம் வகுப்பு தேர்வு நடத்தாமல் 12ம் வகுப்புக்கான பாடத்தை முன்கூட்டியே படிக்க வைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.இதன் காரணமாக தான் 11ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தும் முறை அமலுக்கு வந்தது.
தற்போது கடந்த 5 ஆண்டுகளாக 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், இதற்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி,11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையில்லை. தேர்வு ரத்து தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் அரசு மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.