அதிரை SISYA - வின் சூப்பர் முயற்சி.. பொதுசிவில் சட்டத்துக்கு உங்களின் எதிர்ப்பை ஈசியா தெரிவிக்கலாம்

பொது சிவில் சட்டத்திற்கான பணிகளை தொடங்கி இருக்கும் மத்திய அரசு இது தொடர்பாக மக்களிடம் ஆன்லைனில் மூலம் கருத்து கேட்டு வரும் நிலையில், அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இளைஞர் அமைப்பு சார்பில் ஒரே கிளிக்கில் மூலம் மெயில் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்டவற்றில் இஸ்லாமியர்கள் பின்பற்றிவரும் ஷரீஅத் சட்டம் ஒழிக்கப்பட்டு பொது சட்டம் வரும். பொது சிவில் சட்டம் குறித்து பொது மக்களிடம் இருந்தும் பதிவு செய்யப்பட்ட மத அமைப்புகளிடமிருந்தும் மத்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டிருக்கிறது. அதை ஒரு மாதத்துக்குள் (14.07.2023) அனுப்ப வேண்டும் என கூறியிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள். 

இது தொடர்பாக நமது கடமையை ஆற்றுவது மிக அவசியம் ஆகும். எனவே இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு மெயில் ஐடி இந்த https://www.adiraipirai.com/2023/07/sisya.html?m=1 இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் சென்றவுடன் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இளைஞர் அமைப்பு சார்பில் தொடங்கப்பட்ட ஒரு கிளிக்கில் மெயில் அனுப்பும் வசதி மேலே உள்ள SUBMIT பட்டனை கிளிக் செய்தால் உங்கள் Email நேரடியாக ஓபன் ஆகும். அதில் SEND பட்டனை அழுத்தினால் மெயில் சென்றுவிடும்.

Source from :adiraipirai

 
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات