தமிழகத்தை நோக்கி 'மிக்ஜாம்' புயல்...  பாதிக்கப்படப்போகும் மாவட்டங்கள் - உஷார் நிலையில் மீட்பு படையினர்

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது வலுப்பெற்று புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது. அது புயலாக மாறி சென்னை மற்றும் ஆந்திரா இடையே கரையை வரும் 4ஆம் தேதி கரையை கடக்க உள்ளது. அதாவது, இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் மேற்கு-வடமேற்கு (west-northwestwards) திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் (Southeast Bay of Bengal ) பகுதிகளில் 03-12-2023 வாக்கில் புயலாக (Cyclonic Storm) வலுப்பெற இருக்கிறது.

அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து (northwestwards ) 04-12-2023 அதிகாலை வாக்கில் வடதமிழகம் (North Tamil Nadu)- தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் (South Andhra Pradesh coasts நிலவக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 3 ஆம் தேதி இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது தமிழகத்தின் ஒரு சில டெல்டா மாவட்டங்களும்,  வட மாவட்டங்களும் அதிக பாதிப்பை எதிர்கொள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது  திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழகத்தின் பகுதிகள் புயல் பாதிப்பை எதிர்கொள்ளும்.

வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதில்,  வருவாய் துறை நகராட்சி நிர்வாகத்துறை சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனையொட்டி தமிழக அரசு மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்டவை தயார் நிலையில் இருக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்