14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை எந்த ஒரு பணிகளிலும், தயாரிப்பு தொடர்புடைய துறைகளிலும் பணியமர்த்துவது குற்றமாகும். 14 வயது நிறைவடைந்த, ஆனால் 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில் தொடர்புடைய பணிகளான செங்கல்சூளை, கல் குவாரி, பட்டாசு தொழில் மற்றும் அனைத்து வகையான இதர பணிகளில்
பணியமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டவிதிகளை மீறும் பட்சத்தில் ரூ. 20 ஆயிரத்திற்கும் குறையாமல், ரூ. 50 ஆயிரத்திற்கு மிகாமல் அபராதம் அல்லது 6 மாதங்களுக்கு குறையாமல் அல்லது 2 ஆண்டுகளுக்கு மேற்படாமல் சிறை தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது.
பாபநாசம் மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய கடை நிறுவன உரிமையாளர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தலா ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையானது தஞ்சை மாவட்ட குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் மறு வாழ்வு நலச்சங்க வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அரசின் பங்கு தொகையான தலா ரூ. 15 ஆயிரம் வரப் பெற்றவுடன் அபராத தொகை தலா ரூ. 20 ஆயிரத்தையும் சேர்த்து ரூ. 35 ஆயிரம் சிறுவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, சிறுவர்களின் நல்வாழ்விற்காக பயன்படுத்தப்படும்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.