கரைபுரளும் காவிரி ஆற்றின் துணையுடன் திரும்பிய பக்கமெல்லாம் பசுமை போர்த்தி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் மாவட்டம் தஞ்சாவூர். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை, 1,000 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழனால் கட்டி எழுப்பப்பட்ட பெரிய கோயில், தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் தட்டு, வீணை உள்ளிட்டவை இந்த மாவட்டத்தின் சிறப்புகள். விவசாயமும், மீன்பிடி தொழிலும் பிரதானமாக கொண்ட தஞ்சாவூரில் சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் என ஆண்டவர்கள் அதிகம்.
தமிழ்நாட்டின் 30வது நாடாளுமன்ற தொகுதியாக உள்ள தஞ்சையில், மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 1952 முதல் 2019ஆம் ஆண்டு வரை 19 முறை இந்த தொகுதிக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிக முறை வென்ற கட்சி காங்கிரஸ் தான். ஆனால் காங்கிரஸ் 9 முறை வெற்றிபெற்றிருந்தாலும், இந்த தொகுதியில் அதிக முறை, அதாவது 6 முறை எம்.பி.யாக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.
கடந்த தேர்தலில் திமுக, தமாகா, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 55 சதவீத வாக்குகளுடன் வெற்றிபெற்றார் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். அவர் 5 லட்சத்து 88 ஆயிரத்து 978 வாக்குகள் பெற்ற நிலையில், 2 லட்சத்து 20 ஆயிரத்து 849 வாக்குகளை மட்டுமே வாங்கி தோல்வியைத் தழுவினார் தமாகா வேட்பாளர் நடராஜன்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.