வளைகுடா நாடுகளில் புனித ரமலான் நோன்பு இன்று தொடங்கியது.
சவூதி அரேபியாவில் பிறை தென்பட்ட நிலையில் இன்று(மார்ச் 11) முதல் ரமலான் நோன்பு துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் நேற்று (மார்ச் 10) ரமலான் பிறை பார்க்கும் நிகழ்வு நடந்தது. அதன்படி சவூதி அரேபியாவில் நேற்று பிறை தென்பட்டுள்ளது. இதனால் இன்று (மார்ச் 11 - திங்கட்ழமை) முதல் ரமலான் மாதம் நோன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஷபான் மாதத்தின் கடைசி நாள் என்றும் இன்று (மார்ச் 11) ரமலான் மாதத்தின் முதல் நாள் என்றும் சவுதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியது.
ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சவுதி அரேபியாவையே பின்பற்றும் என்பதால், குவைத், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று முதல் ரமலான் நோன்பு ஆரம்பம் ஆனது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, பொதுவாக சவூதி அரேபியாவுக்கு மறுநாள் ரமலான் நோன்பு தொடங்கும். எனவே வரும் செவ்வாய்க்கிழமை இங்கு ரமலான் தொடங்க வாய்ப்புள்ளது. இருப்பினும் பிறை பார்த்தே ரமலான் நோன்பு அறிவிப்பு வெளியாகும்.
Saudi arabia
Kuwait
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.