செந்தலைப்பட்டினத்தில் பொதுநல சங்கம் சார்பாக 110 குடும்பங்களுக்கு இந்த 2025 ஆம் வருடத்திற்க்கான ஃபித்ரா வழங்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம் செந்தலைப்பட்டினம் கிராமத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட பொதுநல சங்கம்,
சமூக சேவை மற்றும் ஊர் மக்களுக்கு தேவையான பல பொது சேவைகளில் ஈடுபட்டுவருகின்றது. குறிப்பாக உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் சேவை முதல் ஊருக்கு தேவையான அடிப்படை தேவை, மருத்துவ உதவி, திருமண உதவி, சமூக விழிப்புணர்வு போன்ற பல சேவைகளை இதுவரை எந்த தடையும் இல்லாமல் பொதுநல சங்கம் செய்து வருகிறது.
ரமலான் மாத வணக்கங்களில் ஜகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். பிற காலங்களை விட ரமலான் மாதத்தில் அதிகமாக தர்மம் செய்ய நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக, பெருநாள் தினத்தன்று புத்தாடை அணிந்து, அறுசுவை உணவருந்தி, மகிழ்வை பகிர்ந்து கொள்வதில் ஏழை, பணக்காரர்களுக்கு மத்தியில் வித்தியாசம் காணாமல், இஸ்லாமிய சகோதரத்துவம் நிலைநாட்டப்படவேண்டும்! என்ற உயர்ந்த நோக்கத்தில் ஜகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையான தர்மமாக்கியுள்ளார்கள்.
பொது நல சங்கம் தொடர்ச்சியாக கடந்த 10 வருடங்களாக நோன்பு காலங்களில் கடமையாக்கப்பட்ட ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் பொருட்களை வருடா வருடம் இடைவிடாமல் வழங்கி வருகின்றது. இந்த வருடமும் அதற்கான தொகை நிர்வாகத்தின் சார்பாக வசூல் செய்யப்பட்டு நேற்று சுமார் 110 உள்ளூர் ஏழை எழிய
மக்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
வெளிநாடுகளில் நோன்பு பெருநாள் கொண்டாடுவதற்கு முன்பாக நேற்று இரவு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் ஆண்டிற்கான ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்ட பொருள்கள் !!
* 5 Kg அரிசி
* 1 kg சீனி
* 2 kg ஆட்டா மாவு
* அரை லிட்டர் கோல்டு வின்னர்
* சேமியா 1 பாக்கெட்
* சவ்வரிசி கால் கிலோ
* மஞ்சள் தூள் 1 பாக்கெட்
* பிரியாணி மசாலா 1 பாக்கெட்
* மட்டன் மசாலா 1 பாக்கெட்
* சிக்கன் மசாலா 1 பாக்கெட்
நன்றி அறிவிப்பு.
நம்பிக்கையுடன் ஃபித்ரா தொகையை ஃபித்ராவிற்கு மட்டும் பயன்படுத்தும் பொதுநல சங்கத்திற்கு உங்கள் ஃபித்ரா தொகையை எங்களிடம் வழங்கிய உறவுகள் அனைவருக்கும் பொதுநல சங்கம் சார்பாக நன்றியையும் சலாத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்...... என பொதுநல சங்கம் தனது முகநூல் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளது.
ஃபித்ரா தொகைகளை ஒருங்கிணைத்து ஃபித்ரா வாழங்குதலை சிறப்பாக வழங்சிய பொதுநல சங்க உள்ளூர் நிர்வாகிகளை வாழ்த்துகிறது செந்தலைநியூஸ்
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.