செந்தலைப்பட்டினம், பிப்.17 — கடலோர பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், தேசிய ஒற்றுமை மற்றும் சமூக பங்களிப்பை மேம்படுத்தும் வகையிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) வீரர்கள் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 22 வரை 'வந்தே மாதரம் கடலோர சைக்ளோதான்' என்ற விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளது. 25 நாட்கள் நடைபெறும் இந்தப் பயணத்தில் 64 வீரர்கள் (33 பெண்கள், 31 ஆண்கள்) 6553 கிலோமீட்டர் தூரம் பயணிக்கின்றனர்.
“Vande Mataram CISF Coastal Cyclothon 2026” என்ற தேசிய அளவிலான சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வரும் CISF வீரர்கள் இன்று காலை செந்தலைப்பட்டினம் பகுதியில் வருகை தந்தனர். CISF வீரர்களுக்கு செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கம் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் சார்பில் இன்று சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்சி இன்று காலை பொதுநல சங்க அலுவலகம் அருகே நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் ஜமாத்தார்கள் மற்றும் பொதுநல சங்க நிர்வாகிகள் பள்ளி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.