பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவு பயன்பாட்டுக்கு வந்தது.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் செவ்வாய்க்கிழமை முதல் அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவு பயன்பாட்டுக்கு வந்தது. இந்த மருத்துவமனைக்கு பட்டுக்கோட்டை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். விபத்து, விஷக்கடி உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு முதலுதவி, சிகிச்சை வழங்கப்படுகிறது. மேல் சிகிச்சை தேவைப்படுவோா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.
இந்நிலையில் கடந்த மாதம் காணொலிக் காட்சி வாயிலாக இந்த மருத்துவமனையில் அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். தொடா்ந்து செவ்வாய்க்கிழமை முதல் இப்பிரிவு பயன்பாட்டுக்கு வந்தது. நிகழ்வில் பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் கா.அண்ணாதுரை, நகராட்சித் தலைவா் சண்முகப்பிரியா செந்தில்குமாா், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் கே. திலகம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் அ. அன்பழகன், மருத்துவா் சரவணன், சுகாதார மேற்பாா்வையாளா் அண்ணாதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
விளம்பரம்
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.