மனோரா கடற்கரையில் 15 ஆயிரம் பனை விதைகள் நடவு விழா

மல்லிப்பட்டினம் அடுத்த மனோரா கடற்கரையில் 15 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு பணி நாளை (டிசம்பர். 24) நடக்கிறது
500 கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம், ஓம்கார் பவுண்டேசன், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மனோரா, மனோரா ரோட்டரி கிளப், பட்டுக்கோட்டை விதை அறக்கட்டளை, கைஃபா கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு இணைந்து முன்னெடுக்கும் டெல்டா மாவட்ட கடற்கரை பகுதிகளில் 5 இலட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி தொடக்கவிழா பேராவூரணி அடுத்த மனோரா கடற்கரையில் டிசம்பர் 24 ம் தேதி சனிக்கிழமை காலை 8. 30 மணிக்கு தொடங்குகிறது. 

இப்பணியில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 6 கல்லூரிகளிலிருந்து 500 நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று பனை விதைகளை விதைப்பு செய்கின்றனர். பின்பு கடற்கரை பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சேகரித்து சேதுபாவாசத்திரம் ஒன்றிய சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர். 

பனை விதைகள் விதைக்கும் பணியை மாவட்ட வனத்துறை அலுவலர்கள் திருவாரூர் முனைவர் க. அறிவொளி, தஞ்சாவூர் அகில்தம்பி, நாட்டு நலப்பணித்திட்ட மாநில அலுவலர் முனைவர் ம. செந்தில்குமார், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ. இலக்குமி பிரபா உள்ளிட்டோர் தொடங்கி வைக்கிறார்கள். இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மனோரா கிளை பொருளாளர் எஸ். பழனியப்பன் பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி கிளப் தலைவர் பி. சிவச்சந்திரன், பட்டுக்கோட்டை விதை அறக்கட்டளை தலைவர் சக்திகாந்த், கைஃபா கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க தலைவர் கார்த்திகேயன் வேலுச்சாமி, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு. ராஜவேலு, சொக்கநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராம் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மன்னார்குடி இராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப. பிரபாகரன், கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர் முனைவர் ஏ. முருகானந்தம், ஓம்கார் பவுண்டேசன் இயக்குனர் முனைவர் பாலாஜி, கே. நீலகண்டன், முகமது அலி ஜின்னா ஆகியோர் செய்து வருகின்றனர்.
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மனோரா கிளை தலைவர் டாக்டர் ஏ. பன்னீர்செல்வம் வரவேற்கிறார். மல்லிப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலாபேகம் முகமது அலி ஜின்னா நன்றி கூறுகிறார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்