செந்தலை SNCC அணியினரால் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி - முதல் பரிசை வென்ற குருவிக்கரம்பை

செந்தலையில் SNCC அணியினரால் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசு தொகையை தட்டி சென்ற குருவிக்கரம்பை இரண்டாம் பரிசு தொகையை தட்டி சென்ற செந்தலை SNCC

தஞ்சை மாவட்டம் செந்தலைப்பட்டினத்தில்  SNCC அணியினரால் நடத்தப்பட்ட 15 - ம் ஆண்டு சுழற்கோப்பைக்கான மாபெரும் தொடர் கிரிக்கெட் போட்டி ஜனவரி 17 மற்றும் 18.01.2026 ஆகிய தேதிகளில் செந்தலைப்பட்டினம் EC சாலை அருகில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 16 அணிகள் இப்போட்டியில் பங்குபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் செந்தலை SNCC அணியும் குருவிக்கரம்பை அணியும் மோதின இறுதியில் குருவிக்கரம்பை அணி வெற்றிப்பெற்றது.

முதல் பரிசு ரூ.20,000 வென்ற அணிக்கு செந்தலை Ex. ஊராட்சிமன்றத் தலைவர் M. முகமது ரபீக் அவர்கள் பரிசு தொகையை வழங்கினார்.  இரண்டாம் பரிசு ரூ.15,000 வென்ற அணிக்கு J.ரியாஸ் அகமது மற்றும் SNCC அணியின் சார்பாக வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசு பெற்ற அணிக்கு ரூ.10,000 பரிசு தொகையை F. முகமது மிராசா மற்றும் S.A .மாலிக் இவர்களின் சார்பாக வழங்கப்பட்டது. நான்காம் பரிசு தொகை ரூ.5,000 R.வாபிக் மற்றும் M.மகாதீர் இவர்களின் சார்பாக வழங்கப்பட்டது.

பரிசு பெற்றி அணிகள்:

முதல் பரிசு : குருவிக்கரம்பை 

இரண்டாம் பரிசு : SNCC

மூன்றாம் பரிசு : தொண்டி 

நான்காம் பரிசு : மல்லிப்பட்டினம் மற்றும் கோட்டைக்காடு


கருத்துரையிடுக

0 கருத்துகள்