20 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்," குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி துறையின் டிஜிபியாக இருந்த, ஐபிஎஸ் அதிகாரி ஆபாஷ் குமார், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்ப்புப் பணிகள் துறையின் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக, ஐபிஎஸ் அதிகாரி ஆசியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி செந்தில்குமாரும், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி கலைசெல்வனும் நியமிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி ஸ்டீபனும், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி சிவக்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி முத்தரசி நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரான ஐபிஎஸ் அதிகாரி ரவளி பிரியா சென்னை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தம் 20 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.