ஜனநாயகத்தை வென்று விட்டது பணநாயகம்.. ஆர்.கே.நகர் குறித்து ராமதாஸ் கருத்து

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் முடிவை அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தினகரன் முன்னிலையில் உள்ள நிலையில் பல்வேறு கட்சியினரும் தேர்தல் முடிவு குறித்த தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்
தேர்தல் முன்னிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தாம் ஏற்கனவே கூறியதைப் போல ஜனநாயகத்தை பணநாயகம் வென்று விட்டதாக கூறியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளை தெரிவித்து வரும் ராமதாஸ், திராவிட கட்சிகள் பணநாயகத்தை வளர்த்து தமிழகத்தை அழிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
ஆளுங்கட்சியினர் தினகரனின் முன்னிலை வகித்து வருவதை சீர்குலைக்கும் விதமாக வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பதிவு செய்துள்ள அவர், செய்தி சேகரிக்கப்படும் பத்திரிக்கையாளர்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
முதலில் பணபலத்தையும், பின் படைபலத்தையும் ஆளுங்கட்சியினர் காட்ட துடிக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. வன்முறையாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்