தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திமுக-சார்பாக திரு.அசோக்குமார் உதவித்தொகை வழங்கினார்.


தஞ்சை மாவட்டம், பேராவூரணி தாலுகாவில் உள்ள செந்தலைவயல் என்ற கிராமத்தில் கடந்த 9-06-2019 அன்று மின் கசிவு காரணமாக குடிசை வீடு தீ பிடித்து அருகில் உள்ள வீடுகளும் தொடர்ந்து தீ பற்றி எரிந்து சமயல் எரிவாயு வெடித்தது இதில் 4 வீடுகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட குடும்பத்தை பேராவூரணி சட்டமன்ற தொகுதி திமுக சார்பாக திரு.அசோக்குமார் அவர்கள் இன்று (11-06-2019) நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5000 உதவித்தொகை வழங்கினார்.







தகவல் : S.சேக்அப்துல்லா

கருத்துரையிடுக

0 கருத்துகள்