தமிழகத்தில் 2018 - ம் ஆண்டு ஜனவரி - ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் நடந்த விபத்துகளில் 40 . 53 % இருசக்கர வாகன விபத்துகள்தாம் . இதில் 73 . 14 சதவிகிதம் பேர் தலையில் அடிபட்டே உயிரிழந்திருக்கிறார்கள் .எனவே வாகனங்களில் செல்வோர் உயிரை பாதுகாத்து கொள்ள சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் மற்றும் கார்களில் செல்வோர் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பல பகுதிகளில் காவல்துறை ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கிறது. அதன் தொடர்ச்சியாக நமது ஊர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காவல்துறை தீவிர ஹெல்மெட் சோதனையில் மாலை முதல் இரவு 7 மணி வரை ஈடுபட்டுவருகின்றனர்.
எனவே இருசக்கர வாகனங்களில் பயணிக்ககூடிய நமது ஊர் மக்கள் அபராத தொகை கட்டவேண்டும் என்பதற்க்காக இல்லாமல் நம் உயிரை காக்கும் என்பதற்க்காக ஹெல்மெட் அணிந்து பயணத்தை மேற்கொள்ளுமாறு செந்தலைநியூஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.