பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இந்த அட்டவனையின்படி மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதிவரை தேர்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் 2019- 2020-ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்புக்கு மார்ச் 17-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, தமிழ் மற்றும் ஆங்கிலத்துக்கு இரண்டாம் தாள் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனையடுத்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
புதிய தேர்வு அட்டவணை:
27-03-2020 வெள்ளிக்கிழமை - மொழிப்பாடம்
28-03-2020 சனிக்கிழமை - விருப்ப மொழி
31-03-2020-செவ்வாய்கிழமை- ஆங்கிலம்
03-03-2020-வெள்ளிக்கிழமை - சமூக அறவியல்
07-03-2020-செவ்வாய்கிழமை - அறிவியல்
13-04-2020- திங்கள்கிழமை - கணிதம்
மே 4ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.