தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 பணியிடங்களுக்கானத் தேர்வினை 16,29,865 பேர் எழுதினர். 7,18,995 பெண்களும், 5,31,410 பெண்கள் உள்ளிட்ட 16 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
செப்டம்பர் 1-ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியியானது. சுமார் 6,500-ஆக இருந்த பணியிடங்களிலிருந்து தற்போது 3,000 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால், தேர்வு எழுதியதில் கூடுதலானவர்கள் பயனடைவார்கள்.
தற்போது காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளதன்படி, தேர்வு எழுதியர்களின் மதிப்பெண் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள் என அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.