செந்தலை ஊராட்சி மன்றத் தலைவர்தேர்தல் பிரச்சாரம் தீவிரம்.


தமிழ்நாட்டில் ஊராட்சி மன்றங்கள், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கான தேர்தல்கள் 2 கட்டங்களாக வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு அது சரிபார்க்கப்பட்டு தேர்தலும் நெருங்கிவிட்டது. சில கிராமங்களில் கிராம மக்களே போட்டியின்றி தலைவர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களுக்கான சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து நமது ஊர் வேட்பாளர்கள்  தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒலிபெருக்கி  விளம்பரம் மற்றும் துண்டுசீட்டு விளம்பரங்கள் மூலம் இரவு பகல் பாராமல்  வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாம் கட்ட வாக்குபதிவாக வருகின்ற 30/12/2019 அன்று நமது ஊரில் வாக்குபதிவு நடைபெறுகின்றது.
வாக்குபதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி மாதம் 2 - ந்தேதி நடைபெறும்.,

கருத்துரையிடுக

0 கருத்துகள்