விண்வெளியில் பறக்கப் போகும்… தஞ்சாவூர் மாணவனின் ராக்கெட்”..!!

அமெரிக்காவை சேர்ந்த Doodle Learning நிறுவனம் நாசா உடன் இணைந்து Cubes In Space என்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்துகிறது. தஞ்சாவூர்
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கரந்தை பகுதியைச் சேர்ந்த மாணவர் ரியாஸ்தீன், 2019-2020 காண போட்டியில் கலந்து கொண்டு தேர்வாகியுள்ளார். 73 நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டிகளில் 2 சாட்டிலைட்டுகளை வடிவமைத்து ரியாஸ்தீன் தேர்வாகியுள்ளார். 37மில்லி மீட்டர் உயரமும், 33 கிராம் எடையும் உடைய இந்த இரு சாட்டிலைட் உலகிலேயே மிகவும் எடை குறைவான Femto செயற்கைக் கோள்கள் ஆகும். 2021 ஜூனில், சவுண்டிங் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்