சென்னையிலிருந்து கொச்சி செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுப்பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னையிலிருந்து கொச்சி செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இன்று மாலை 6.30 மணிக்கு 81 பயணிகளுடன் புறப்பட தயாரானது. விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறி அமா்ந்தனா். விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கும்போது விமானத்தில் திடீா் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுப்பிடித்தாா். இதையடுத்து விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்திவிட்டு, சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா்.
இதையடுத்து விமானம் மீண்டும் அது நிற்கவேண்டிய இடத்திற்கே கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. விமான பொறியாளா்கள் விமானத்திற்குள் ஏறி, தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய முயன்றனா். ஆனால் உடனடியாக சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு ஓய்வு கூடத்தில் அமரவைக்கப்பட்டனா். அதன் பிறகு மாற்று விமானத்தில் பயணிகளை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுப்பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 81 பயணிகள், 5 விமான ஊழியா்கள் உட்பட 86 போ் உயிா் தப்பினா்.
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...
SenthalaiNews WhatsApp group /
Facebook /
Instagram /
ShareChat /
Twitter /
Telegram /
YouTube /
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.