புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியின் பல்வேறு எல்லைகளில் விவசாயிகள் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் உறையவைக்கும் குளிரில் தொடர்ந்து 31-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக டிசம்பர் 29-ஆம் தேதி மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. ஏற்கனவே 5 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், டிசம்பர் 29-ஆம் தேதி காலை காலை 11 மணிக்கு ஆறாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வராஜ் இந்தியா அமைப்பை சேர்ந்த யோகேந்திர யாதவ், ''மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார். டிசம்பர் 29-ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வது மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை மீது சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும்'' என்று கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...
SenthalaiNews WhatsApp group /
Facebook /
Instagram /
ShareChat /
Twitter /
Telegram /
YouTube /
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.