தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் செந்தலைப்படினம் மேலத்தெருவில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
மேலத்தெருவில் பல வருங்களாக மழைக்காலம் வந்தால் இந்த பகுதி குளம் போல கானப்படும் இங்கு வடிகால் அமைப்பது பொது மக்களின் பல வருட கோரிக்கையாக இருந்தது. இந்த கோரிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக ஒன்றிய கவுன்சிலர் (ஏற்பாடு) நிதியிலிந்து சுமார் ரூ 18 லட்சம் மதிப்பில் மேலத்தெரு அப்துல் அஜிஸ் வீட்டிலிந்து பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள குளம் வரை வடிகால் அமைக்கும் பணி ஒன்றிய கவுன்சிலர் செய்யதுமுகமது மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் ரகுமத்துல்லா இவர்களின் மேற்பார்வையில் இந்த வடிகால் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
மேலும் வடிகால் அமைக்கும் பணி முடிந்த பிறகு மேலத்தெருவில் மதரஷா முதல் கிழவிக் கடை வரை ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ 6.75 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கப்பட இருப்பதாக ஒன்றிய கவுன்சிலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.