சேதுபாவாசத்திரம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சொக்கநாதபுரம் ஊராட்சியில், சொக்கநாதபுரம் ஒத்தக்கடையில், சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில், கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலாகி விட்டது. தகவலறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்  
N. அசோக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காய்கறி, மளிகை பொருட்கள், அரிசி ஆகிய பொருட்களுடன் ரூபாய் 5, 000ம் நிவாரணம் வழங்கினார்.

அப்போது, சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி. முத்துமாணிக்கம், ஊராட்சி மன்றத் தலைவர் ராம்பிரசாத், பொதுக்குழு உறுப்பினர்கள் அப்துல் மஜீது, தனபால், ஒன்றியக் குழு உறுப்பினர் ராசேந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்