தஞ்சை மாவட்டம் முழுவதும் மின் இணைப்புகளுக்கான பெயர் மாற்ற சிறப்பு முகாம்

தஞ்சை மாவட்டம் முழுவதும் மின் இணைப்புகளுக்கான பெயர் மாற்ற
சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மின்பகிர்மான வட்டத்தில் உள்ள அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும் இன்று ( திங்கள்கிழமை ) முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்ற முகாம் நடைபெற உள்ளது. மின்நுகர்வோர்கள் தங்களது இணைப்பிற்கான விவரங்களை புதுப்பிக்கும் வகையிலும் மின் இணைப்புகளில் உள்ள பெயரை மாற்றும் விதமாகவும் தஞ்சை மாவட்டம் முழுவதும் சிறப்பு பெயர் மாற்ற முகாம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மின்நுகர்வோர்கள் தங்களுக்குரிய ஆவணங்களுடன் தொடர்புடைய பிரிவு அலுவலகங்களில் உரிய பெயர் மாற்ற கட்டணம் செலுத்தி மின் இணைப்புகளுக்கான பெயர் மாற்ற சேவையை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்