வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இந்தியக் குடிமக்கள் விசா இல்லாமலேயே மலேசியாவுக்குச் செல்லலாம். அங்கு 30 நாட்கள் வரை தங்கவும் செய்யலாம்.
இந்தியா மற்றும் சீனாவின் குடிமக்கள் இனி மலேசியாவில் விசா இல்லாமல் ஒரு மாதம் தங்கலாம். டிசம்பர்-1,2023 முதல் திட்டம் நடைமுறையில் வரும் என்று மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் நேற்று(26/11/23) ஞாயிற்றுக்கிழமை மக்கள் நீதிக் கட்சி மாநாட்டில் பேசியபோது,இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பின்படி, இந்தியா மற்றும் சீனாவில் இருந்து மலேசியாவுக்கு செல்பவர்கள் விசா அனுமதி பெறத் தேவையில்லை. சீனாவும் இந்தியாவும் மலேசியாவின் நான்காவது மற்றும் ஐந்தாவது முக்கியமான வர்த்தக ஆதாரங்கள் ஆகும்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 15 லட்சம் சீனர்கள் மற்றும் 3,54,486 இந்திய சுற்றுலா பயணிகள் மலேசியாவை பார்வையிட்டுள்ளனர். இதுபோல் இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியர்கள் விசாயின்றி தங்கள் நாடுகளை பார்வையிட முடியும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்படத்தக்கது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.