பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை.!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் வங்கிகளுக்கு இன்று முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பொங்கலை கொண்டாடுவதற்கு நேற்று முதல் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். இந்தநிலையில், இன்று முதல் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 14-ம் தேதி போகி பண்டிகை, ஜனவரி 15-ம் தேதி பொங்கல் திருநாள், ஜனவரி 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 17-ம் தேதி உழவர் திருநாள் ஆகிய பண்டிகைகள் கொண்டாப்பட உள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். 

இன்று ஜனவரி 13-ம் தேதி வங்கிகளுக்கு 2-வது சனிக்கிழமை விடுமுறை,  ஜனவரி 14 பொது விடுமுறை, ஜனவரி 15 பொங்கல் விடுமுறை, ஜனவரி 16 செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன், வாட்ஸ் அப் மற்றும் மொபைல் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இதற்கு ஏற்றார் போல் தங்களின் பணத் தேவைகளை திட்டமிட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்