தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்காளர் உள்பட 5 பேர் மரணம்: ஏடிஜிபி தகவல் !

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த வாக்குப் பதிவின்போது வாக்காளர் உள்பட 5 பேர் இயற்கையாக மரணமடைந்ததாக ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவின்போது கட்சிகள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டதாகவும், மதுரையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி வந்ததாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்