தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை இணைக்க சிறப்பு முகாம்


வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்க ஏதுவாக தஞ்சை மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது.

தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்கு சாவடி நிலைய அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில் படிவம் 6 பி இல் வாக்காளர்களின் ஆதார் எண், மொபைல் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது.

இதுவரை 20 லட்சத்து 37 ஆயிரத்து 651 வாக்காளர்களில், 13 லட்சத்து 5 ஆயிரத்து 947 வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர். பொதுமக்கள் வசதிக்காக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 2,035 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் வரும் 19ஆம் தேதி மற்றும் மார்ச் 5ஆம் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்