நாகப்பட்டினம் தொகுதியில் தமீமுன் அன்சாரி முன்னிலை !


நாகபட்டினம் தொகுதியில் அதி.மு.க. கூட்டணி மனிதநேய ஜனநாயக கட்சி வேட்பாளர் தமீமுன் அன்சாரி முன்னிலையில் உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு 68 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் காலை 10.46 மணி நிலவரப்படி, நாகப்பட்டினம் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியின் மனிதநேய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் தமீமுன் அன்சாரி 4,345 வாக்குக்களும், தி.மு.க.கூட்டணி மனிதநேய மக்கள் கட்சி  வேட்பாளர் ஜபருல்லா 3,266 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில், தமீமுன் அன்சாரி 1079 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்