மழை பாதித்த பகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் நீடிப்பு !

மழை பாதித்த பகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் நீடிப்பு குறித்து மாலை 3 மணிக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேஷ் லக்கானி, தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 42.1 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், மழையால் மின்தடை ஏற்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் அவசர விளக்குகள் மூலம் வாக்குப் பதிவு நடைபெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல, மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்குச் சாவடிக்கு யார் வந்தாலும், அவர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்களிக்க அனுமஹ்டிக்கப்படும் என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்