திருச்சி அரசு சட்டகல்லூரி மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டி, மானபங்கம் செய்த ABVP குண்டர்களை கைது செய்! ABVP கூட்டத்தை தடை செய்!
அரசுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் கோரிக்கை
(13-08-2016) அன்று திருச்சி அரசு சட்ட கல்லூரியில் RSS-ன் துணை அமைப்பான ABVP சார்ந்த குண்டர்கள் சட்ட கல்லூரி மாணவர்களை ABVP ல் உறுப்பினராகும் படி மிரட்டியுள்ளனர்.
இதில் சட்ட கல்லூரி மாணவி ஒருவரை உறுப்பினராக சேர கையெழுத்து போடும் படி கட்டாயப்படுத்தியுள்ளனர். அந்த மாணவி கையெழுத்திட மறுத்துள்ளார்.
இதனால் எரிச்சல் அடைந்த ABVP குண்டர்கள் அந்த பெண்ணின் ஆடையை இழுத்து தகாத வார்தையில் திட்டி, மிரட்டி அந்த பெண்ணை மானபங்கம் செய்துள்ளனர்.
இதை தட்டி கேட்ட சட்ட கல்லூரி மாணவர்களை காட்டுமிராண்டி தனமாக அடித்துள்ளனர்.
ஒரு அமைப்பில் உறுப்பினராக சேர்வது என்பது அவரவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால் இதற்கு மாற்றமாக இந்த அமைப்பில் தான் சேர வேண்டும் என வலுக்கட்டாயப்படுத்துவது இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மீறுவதற்கு சமம்.
மேலும் மாணவியை மானபங்கபடுத்திய ABVP குண்டர்கள் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற ஈன செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கக்கூடிய ABVP குண்டர்களை வன்மையாக கண்டிப்பதோடு, இன்னும் ABVP, RSS போன்ற விஷம இயக்கங்களை தேச பாதுகாப்பை கருதி அவ்வியக்கங்களை தடை செய்ய வேண்டும் என அரசுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது.
ரியாஸ் அஹமது
மாநில செயலாளர்
கேம்பஸ் ஃப்ரண்ட்

0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.